முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

புதுவை குறிஞ்சி நகரை சேர்ந்த முதியவர் சிறுநீரக கோளாறு பிரச்சினையின் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி

புதுவை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). இவர் தனது இளைய மகன் பிரபாகரனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பிரபாகரன் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து தாகூர் நகர் 3-வது குறுக்கு தெருவில் உள்ள மற்றொரு மகன் மனோகர் வீட்டில் சண்முகம் இருந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story