விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

புதுவையில் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை இயற்றவேண்டும், டெல்லி போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் விவசாய பிரிவுகள் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்டு) மாநில தலைவர் கீதநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி தலைவர் தமிழ்வளவன், அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில அமைப்பாளர் புருஷோத்தமன், விவசாயிகள் சங்க துணைத்தலைவர்கள் ராமமூர்த்தி, ராஜா, பொருளாளர் கலியமூர்த்தி, செயலாளர்கள் தாமோதரன், கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story