விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

புதுவையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

மத்திய பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்படாமல் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று தொடர் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக புதுவை ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன், சிறப்பு தலைவர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். ராஜா, முருகன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். டெல்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story