மீனவர் தற்கொலை

புதுவை காலாப்பட்டு அருகே மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு
புதுவை காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 38). மீனவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





