இலவச கண் பரிசோதனை முகாம்


இலவச கண் பரிசோதனை முகாம்
x

இலவச கண் பரிசோதனை முகாமை நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முகாமில் 6-வது நாளான இன்று ரத்ததானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் வடிவேல், மருத்துவர்கள் ரத்னவேல், ரோஷினி விஜயா, புதுவை உதவும் பேரியக்கத்தின் நிறுவனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம், கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story