விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
புதுவையில் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடற்கரையில் கரைத்தனர்
புதுச்சேரி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையில் பொது இடங்கள், கோவில்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளை பொதுமக்கள் கரைத்து வருகின்றனர். குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் கடற்கரையில் பூஜை செய்து சிலைகளை கடலில் கரைத்து வருகின்றனர்.
புதுவை நகரப்பகுதி, கிராமப்பகுதி மற்றும் தமிழக பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story