காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு


காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
x

புதுச்சேரியில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காந்தி பிறந்த நாள்

புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழாவில் சர்வமத பிரார்த்தனை, காந்திய கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து ராட்டையில் நூல் நூற்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

காமராஜர் நினைவு நாள்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story