இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருபுவனையில் வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை

திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டு பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இவர்களது இளைய மகள் மாலதி (22) டிப்ளமோ படித்து முடித்துவிட்டு திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் மாலதியிடம் வேலைக்கு செல்லுமாறு குடிப்போதையில் அவரது தந்தை செந்தில்குமார் அறிவுறுத்தி வந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாலதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story