அரசு ஊழியர் மோட்டார் சைக்கிள் திருட்டு


அரசு ஊழியர் மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மூலக்குளம் அருகே அரசு ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடியவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள

மூலக்குளம்

மூலக்குளம் அடுத்த பிச்சைவீரன் பேட் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 36). இவர் புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் மேல்நிலை எழுத்தராக வேலை செய்து வருகிறார். அவர் பூமியான் பேட்டை ராகவேந்திரா நகரில் உள்ள மாமியார் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்க்கையில் காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள

1 More update

Next Story