புனித சந்தனமாதா தேர்பவனி


புனித சந்தனமாதா தேர்பவனி
x

காரைக்கால் புனித சந்தனமாதா அலங்கரித்த தேர்பவனி நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் பிள்ளைத்தெருவாசலில் நூற்றாண்டுகள் பழமையான புனித சந்தனமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுத்திருவிழா கடந்த 24-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து, தினமும் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு சிறப்பு திருப்பலியும், மின்விளக்குகளால் அலங்கரித்த தேர்பவனியும் நடைபெற்றது.மாவட்ட முதன்மை பங்குகுரு ஜோசுவா மந்திரித்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். விழாவில், கிராம பஞ்சாயத்தார்கள்,மாதா இருதய மடத்து கன்னியர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story