முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்குதல்


முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்குதல்
x

புதுவையில் முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதவு செய்தனர்,

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 45). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மகன் சுரேந்திரனுக்கும், பனித்திட்டு தெற்கு தெருவை சேர்ந்த பாரத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு பாரத் மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன், செல்லதுரை ஆகியோர் சுரேந்திரனை தேடி அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பிரபு, அவரது மனைவி சித்ரா, மற்றொரு மகன் சுரேஷ் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். பதிலுக்கு பாரத்தை பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story