பெற்றோருடன் சென்ற குழந்தையிடம் நகை பறிப்பு


பெற்றோருடன் சென்ற குழந்தையிடம் நகை பறிப்பு
x

புதுவை பெருமாள் கோவிலில் குழந்தையிடம் நகை பறித்த மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவை பெருமாள் கோவிலில் குழந்தையிடம் நகை பறித்த மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

ரெயில்வே ஊழியர்

புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது38). பெங்களூருவில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் குடும்பத்தை பார்க்க புதுச்சேரிக்கு வந்தார்.

நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் அவர், குடும்பத்துடன் புதுவை காந்திவீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர்.

நகை பறிப்பு

அப்போது அவரின் 2½ வயது குழந்தை சஷ்டிகா அணிந்திருந்த 2 பவுன் தங்கநகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கார்த்திகேயன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது கோவிலுக்கு வந்த மூதாட்டி ஒருவர் கூட்டத்தை பயன்படுத்தி குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தது போல் காட்சி பதிவாகி இருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story