தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமிக்கு ஆயுள் தண்டனை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு சுத்துக்கேணி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.


Next Story