லாட்டரி விற்றவர் கைது


லாட்டரி விற்றவர் கைது
x

முதலியார்பேட்டையில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் உப்பளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வானரப்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 33) என்பதும், தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1,500 ரொக்க பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story