மூப்பனார் சிலை இடம் மாறுகிறது


மூப்பனார் சிலை இடம் மாறுகிறது
x

மரப்பாலம் சந்திப்பில் உள்ள மூப்பனார் சிலையை இடமாற்றம் செய்ய பணிகள் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி

புதுவையின் முக்கிய சந்திப்புகளில் நடுரோட்டில் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தலைவர்களின் சிலையை சாலையோரமாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் வில்லியனூர் பைபாஸ் சாலையின் நடுவில் இருந்த எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது. அதை அந்த பகுதியிலேயே சாலையோரமாக வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மூப்பனார் சிலை

இந்தநிலையில் புதுவை மரப்பாலம் சந்திப்பில் உள்ள மூப்பனார் சிலையையும் சாலையோரமாக வைக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் இங்கு தரைப்பாலம் அமைக்கும் பணியின்போது இந்த சிலை நடுரோட்டில் இருந்ததால் போக்குவரத்தை மாற்றி அமைப்பதில் சிக்கலும் எழுந்தது.

இதைத்தொடர்ந்து சிலையை சாலையோரம் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது தற்போதுள்ள இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரம் பின்பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.

பீரம் அமைக்கும் பணி

புதிதாக சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில் பீடம் அமைப்பதற்கான வேலை தற்போது நடந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் சாலையின் நடுவில் உள்ள சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு சாலையோரம் நிறுவப்படும். அவ்வாறு சிலை உள்ள இடத்தை மாற்றியமைக்கும்போது மரப்பாலம் சந்திப்பில் இந்திராகாந்தி சிலையில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் சிரமமின்றி செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.


Next Story