தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்


தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. வாழைக்குளம் அங்கன்வாடி மையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை ஒருங்கிணைந்த குழந்தை நலத்திட்ட அதிகாரி செல்வக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில் முத்தியால்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கதிரேசன், புதுச்சேரி ஜிப்மர் சுகாதார மைய மருத்துவ அதிகாரி அர்ச்சனா சுனில் மற்றும் அங்கன்வாடி ஊழியர், சுகாதார பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியபடி சென்றனர்.

இந்த ஊர்வலம் குருசுக்குப்பம், வைத்திக்குப்பம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் வாழைக்குளம் அங்கன்வாடி மையத்தில் நிறைவு பெற்றது. முடிவில் அங்கன்வாடி ஊழியர் லலிதா நன்றி கூறினார்.


Next Story