முதியவர் பிணம்


முதியவர் பிணம்
x

புதுச்சேரியில் உள்ள உருளையன் பேட்டை அருகே மதிக்கத்தக் முதியவர் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் நீல நிற முழுக்கை சட்டையும், சிவப்பு நிறத்தில் போர்வையும் போர்த்தியிருந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story