ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
x

காரைக்கால் பிராவிடையான் ஆற்றுப் பாலத்தில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திரு-பட்டினம்

காரைக்கால் பிராவிடையான் ஆற்றுப் பாலத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திரு-பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர், காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story