ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து பேட்ரியாட்ஸ் அணி வீரர் சாதனை


ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து பேட்ரியாட்ஸ் அணி வீரர் சாதனை
x

புதுவையில் நடந்து வரும் 10 ஓவர் கிரிக்கெட்டில் ஓரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து பேடரியாட்ஸ் அணி வீரர் சாதனை படைத்தார்.

புதுச்சேரி

கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து நடத்தும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்- சீகம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற போட்டியில் ராயல்ஸ் அணியும் பேட்ரியாட்ஸ் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. இந்த அணி வீரர் ரகுபதி அபாரமாக ஆடி 30 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்சர் உட்பட 84 ரன்கள் எடுத்தார்.

158 ரன் வெற்றி இலக்குடன் தொடர்ந்து களம் இறங்கிய பேட்ரியாட்ஸ் அணி 10 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணியின் வீரர் கிருஷ்ண தத் பாண்டே 19 பந்துகளில் 2 பவுண்டரி, 12 சிக்சருடன் 83 ரன்கள் விளாசினார். இதில் அவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்ததுடன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தது இதுவே முதல் முறை ஆகும். ஒரு போட்டியில் மொத்தம் 20 ஓவர்களில் 310 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.

மற்றொரு போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணியும் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் ஸ்மாஷர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னொரு போட்டியில் கிங்ஸ் அணி அவென்ஜர்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


Next Story