தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை


தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை
x

திருபுவனை அருகே தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திருபுவனை

திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் மதகடிப்பட்டு எல்லையில் உள்ள 4 முனை சந்திப்பில் இன்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்தனர்.

பின்னர் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு செய்த போலீசார், அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்தனர்.


Next Story