15 மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு


15 மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு
x

புதுவையில் 15 மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் மேல்நிலை எழுத்தர்கள் 15 பேருக்கு உதவியாளர்களாக (அட்டாக் அடிப்படையில்) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வருகிற 21-ந்தேதிக்குள் பணியில் சேரவேண்டும். இல்லாவிட்டால் ஒரு வருடத்துக்கு பதவி உயர்வு பெற முடியாது. இதேபோல் அரசுத்துறைகளில் பணிபுரியும் 20 உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பணியிட மாறுதல் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.


Next Story