பி.ஆர்.டி.சி. ஊழியர் நூதன போராட்டம்


பி.ஆர்.டி.சி. ஊழியர் நூதன போராட்டம்
x

புதுச்சேரி பி.ஆர்.டி.சி. ஊழியர் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி

புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர் பி.ஆர்.டி.சி. அலுவலகம் முன்பு நேற்று மளிகை பொருட்களுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். சாலை போக்குவரத்து கழகம் சார்பில் முறையாக சம்பளம் வழங்குவதில்லை, கடந்த 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை, சம்பள நிலுவைத்தொகை வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்., இதனால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்படுவதை அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story