காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x

காரைக்கால், அம்பகரத்தூர் அருகே 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி,

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் ரெயில் நிலையம் அருகே ஜவகர் சாலை வழியாக சுரங்க கீழ் பாலம் அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததனர். இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காரைக்கால்-கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். நன்னிலம் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்ய முயன்ற போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் காரைக்கால்-கும்பகோணம் சாலையில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் நன்னிலம் வட்டாட்சியர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story