பொதுப்பணித்துறை ஊழியர்கள், முதல்-அமைச்சருடன் சந்திப்பு


பொதுப்பணித்துறை ஊழியர்கள், முதல்-அமைச்சருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 5:49 PM GMT (Updated: 20 Jun 2023 11:01 AM GMT)

புதுவையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், முதல்-அமைச்சரை சந்தித்தனர்,

புதுச்சேரி

புதுவை பொதுப்பணித்துறையில் கடந்த 2015-ம் ஆண்டு வவுச்சர் ஊழியர்கள் 716 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தினர். அதன்பேரில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க திரண்டு வந்தனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story