போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரம் வெட்டி அகற்றம்


போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரம் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 25 July 2023 5:33 PM GMT (Updated: 25 July 2023 6:44 PM GMT)

ஒயிட் டவுன் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தை தீயணைப்பு துறை வீரர்கள் வெட்டி அகற்றினர்.

புதுச்சேரி

புதுவை ஒயிட் டவுன் பகுதியான சூர்கூப் வீதியில் சாலையோரத்தில் மரம் ஒன்று சாய்ந்த நிலையில் இருந்தது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து சென்றனர். ஆபத்தான நிலையில் உள்ள அந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதுவை தீயணைப்பு துறை அதிகாரி முகந்தன் தலைமையில் வீரர்கள் இன்று அந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன்காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story