கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி


கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி
x

கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான "திறன் அறிதல்" நிகழ்ச்சி இன்று கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தனித்தனியாக வெளிப்படுத்தினர்.இதில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர். இதனை பார்த்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய பேராக அமையும். குழந்தைகளின் உடல் நலம் போலவே, மனநலமும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும். மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு மாணவர்களுக்கு கவர்னர் மாளிகை உதவி செய்யும்' என்றார்.


Next Story