புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி


புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி
x

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை 6.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது.

இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு வில்லியனூர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை பிச்சை முத்து, புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பங்கு தந்தை ஆரோக்கிய நாதன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.


Next Story