ஆம்னி பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


ஆம்னி பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x

விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பஸ் மீது கல்வீசி மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே மற்றொரு சம்பவமாக தனியார் ஆம்னி பஸ் மீது கல்வீசி மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்தனர்.

தனியார் ஆம்னி பஸ்

விழுப்புரம் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், நேற்று பிடாகம் பெட்ரோல் நிலையம் எதிரே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போடியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற தனியார் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே மர்மநபர்களுக்கு தொடர்பா?

முன்னதாக நேற்று அதிகாலை கோலியனூர் கூட்டுரோடு அருகே சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்மீது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கல்வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். அவர்களை பஸ் டிரைவர் காரில் துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிடாகம் பெட்ரோல் நிலையம் எதிரே தனியார் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடியை உடைத்து இருப்பதால் இரு சம்பவங்களிலும் ஒரே மர்ம நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Next Story