சிறுமியை கடத்தி பலாத்காரம்


சிறுமியை கடத்தி பலாத்காரம்
x

திருக்கனூர் அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான புளிச்சப்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் புளிச்சப்பள்ளத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு உறவினர் வீட்டிற்கு வந்த திருக்கனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை சில தினங்களுக்கு முன்பு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story