பீர்பாட்டிலால் பெயிண்டரின் மண்டை உடைப்பு


பீர்பாட்டிலால் பெயிண்டரின் மண்டை உடைப்பு
x

மதுபாரில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் பெயிண்டரின் மண்டையை உடைத்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மூலக்குளம்

மதுபாரில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் பெயிண்டரின் மண்டையை உடைத்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபாரில் தகராறு

புதுச்சேரி வினோபாநகர் களத்துமேடு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் பிரகாஷ் (வயது 36). பெயிண்டர். இவர் தனது நண்பர் சிவக்குமார் என்பவருடன் லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் உள்ள ஒரு பாருக்கு மதுகுடிக்க சென்றார்.

அப்போது அங்கு குறிஞ்சி நகரை சேர்ந்த உதயா, தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு மது குடிக்க வந்தார். மது குடிக்கும்போது, பிரகாசுக்கும், உதயாவின் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

3 பேருக்கு வலைவீச்சு

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த உதயா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து பிரகாசை பீர்பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இதை தடுக்க முயன்ற பிரகாசின் நண்பர் சிவக்குமாரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த பிரகாஷ், சிவக்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயா உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story