வாலிபர் திடீர் சாவு


வாலிபர் திடீர் சாவு
x

தூய தம்பி கார்டன் பகுதியைச் சேர்ந்த வலிபருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மூலக்குளம்

ரெட்டியார்பாளையம் தூய தம்பி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 43). நேற்று மாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதின் பேரில் சந்தானகிருஷ்ணனை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story