தீக்குளித்த வாலிபர் சாவு


தீக்குளித்த வாலிபர் சாவு
x

காரைக்காலில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மேலஓடுதுறை மண்டப தெருவில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது 34). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவருக்கும், அவரது உறவினர் ராஜலட்சுமிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜலட்சுமி, மகேஷ் வசிக்கும் வீடு தனது வீடு என கூறி காலி செய்யக்கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மகேஷ் வீட்டுக்கு முன் ராஜலட்சுமி வேலி அமைத்து அடைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மகேசுக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜலட்சுமி தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகேஷ் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story