மாகி, ஏனாமில் கொரோனா பாதிப்பு இல்லை


மாகி, ஏனாமில் கொரோனா பாதிப்பு இல்லை
x

புதுவையில் புதிதாக 16 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஏனாம், மாகியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இ்ல்லை

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 242 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 16 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதில் 13 பேர் புதுச்சேரியையும், 3 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள் ஆவர். மாகி, ஏனாமில் புதிய பாதிப்பு ஏதும் இல்லை. இன்று 64 பேர் குணமடைந்தனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 12 பேர், வீடுகளில் 350 பேர் என 362 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 6.61 சதவீதமாகவும், குணமடைவது 98.65 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 74 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,204 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 598 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 19 லட்சத்து 66 ஆயிரத்து 53 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story