புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

வாரவிடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி

வாரவிடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இதே போல் இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை, பாண்டி மெரினா பீச், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் களை கட்டியது.

கடலில் இறங்கி சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். மேலும் ஒட்டகம், குதிரை சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

சண்டே மார்க்கெட்

ஒயிட் டவுண் பகுதியில் வெளிமாநில பெண்கள் நாகரிக உடையணிந்து ஒய்யாரமாக வலம் வந்ததை காண முடிந்தது. அவர்கள் அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருந்த ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்துக் மகிழ்ந்தனர்.

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்தி வீதியில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.


Next Story