குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலி


குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலி
x

வில்லியனூரில் குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலியானார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

வில்லியனூர்

வில்லியனூரில் குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி பலியானார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

குடும்ப தகராறில் தீக்குளிப்பு

புதுச்சேரி உருளையன்பேட்டை ராஜா நகர் தியாகராஜன் தெருவை சேர்ந்தவர் யுவராஜன் (வயது 53), அவரது மனைவி மரிஸ் ஸ்டெல்லா (53). இவர்கள் கடந்த ஒரு வருடமாக வில்லியனூர் ஒதியம்பட்டு, பழனியப்பன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஸ்டெல்லா பெயிண்டு அடிக்க பயன்படுத்தும் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் அலறி துடித்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதையடுத்து அவரை கணவர் யுவராஜன் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டெல்லா பரிதாபமாக இறந்தார். யுவராஜனுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story