மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x

குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

காரைக்கால்

குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

சினிமா பார்க்க சென்றனர்

காரைக்காலை அடுத்த விழிதியூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். அவரது மனைவி கஸ்தூரி (வயது 43). இவர்களுக்கு அருண்பாண்டியன் (21), கிஷோர் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று கஸ்தூரி குடும்பத்துடன் காரைக்கால் ராயன்பாளையம் பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் சினிமா பார்க்க புறப்பட்டனர். கஸ்தூரி, அவரது தந்தை ஜெயராமனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

தவறி விழுந்தார்...

காரைக்கால் கருணாநிதி புறவழிச்சலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கஸ்தூரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்துபோனார். இந்த விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story