தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை



புதுச்சேரியில் மது குடிப்பதை மகன் கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுச்சேரி
புதுவை கொம்பாக்கம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது54). தொழிலாளி. அவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வ ராஜூக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் குடித்துவிட்டு செல்வராஜ் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை அவரது இளைய மகன் பிரதீப் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire