53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு


53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
x

புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.

புதுச்சேரி

புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.

எழுத்து தேர்வு

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை புதுவை காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர், 178 ஏட்டுகள் என மொத்தம் 207 பேர் எழுத தகுதி பெற்றிருந்தனர்.

இந்தநிலையில் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 194 பேர் எழுதினர்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தேர்வு காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை மேற்பார்வையில் நடந்தது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரசிங் யாதவ் தேர்வை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பரைடு தேர்வு நடக்கிறது.


Next Story