சென்னை வந்த இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு

இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
சென்னை,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இந்த தொடரில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





