திருநெல்வேலியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தாழையூத்து பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
திருநெல்வேலியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த தளவாய்(எ) காவு மகன் பெருமாள் (வயது 25), கணேசன் மகன் அஜித்குமார்(30), பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள்(19) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமாமர் உத்தரவின்பேரில் மேற்சொன்ன 3 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com