7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தையல் கடைக்காரர் போக்சோவில் கைது

7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 68). இவர் தையல் கடை நடத்தி வருகிறார். இவர் 12 வயதான 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி டியூசனுக்கு சென்றபோது சக மாணவிகளிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் மாணவியின் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






