திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட கோடகநல்லூரைச் சேர்ந்த அசோக் (வயது 24) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 1/2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அசோக்கை சுத்தமல்லி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று (17.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





