திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் - செல்வப்பெருந்தகை கண்டனம்


திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் - செல்வப்பெருந்தகை கண்டனம்
x

திருக்குறளை சரி பார்க்காமல் கவர்னர் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

சென்னை ,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள கவர்னர் , திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.கவர்னரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். கவர்னர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story