அரக்கோணம்-சேலம் பயணிகள் ரெயில் ரத்து


அரக்கோணம்-சேலம் பயணிகள் ரெயில் ரத்து
x

முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் பூரி ரத யாத்திரைக்காக 12 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயில் பெட்டி கொண்டு செல்லப்பட உள்ளது. இதன் காரணமாக, அரக்கோணம்-சேலம் பயணிகள் ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.16087), மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயிலும் (16088) ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நேற்று (23-ந்தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story