ரூ.6000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு


ரூ.6000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
x

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 30-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 6000 கோடி மதிப்பில் 4 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1500 கோடி, 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1500 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 7.00 சதவீத பிணையப் பத்திரங்கள் 2031 மறுவெளியீடு ரூபாய் 1000 கோடி, தமிழ்நாடு அரசின் 7.34 சதவீத பிணையப் பத்திரங்கள் 2034 மறுவெளியீடு ரூபாய் 2000 கோடி மற்றும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 30, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) டிசம்பர் 30, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story