கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் - சென்னையில் பரபரப்பு

கடலில் குளிக்கும் போது இறந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரை பகுதியில் 4 இளம் பெண்களின் சடலம் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கரை ஒதுங்கிய 4 பெண்களின் உடல்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்கள் யார்..என போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் கல்லூரி மாணவி சாலினி, வேதகி செல்வம், பவானி, காயத்ரி ஆகிய 4 பேர் என அடையாளம் காணப்பட்டது. இதில் தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர் எனவும் மீதமுள்ளவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கடலில் குளிக்கும் போது இவர்கள் இறந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரை அருகே 4 பெண்களின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






