தஞ்சையில் ஓட்டுநர், நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் - பரபரப்பு காட்சிகள்

நேரப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தஞ்சை,
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனரை மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து போட்டிப்போட்டுக்கொண்டு தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது நேரப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த மோதல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






