திடீரென தீப்பற்றி எரிந்த கார் - ஈரோடு அருகே அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி பழனியாண்டவர் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் புன்னியக்கொடி. இவர் ஒரு ஆம்னி காரை ஓட்டி வந்தார். இந்த நிலையில் மேட்டூர் பிரதான சாலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் 3 மணியளவில் காரில் தீ ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக பவானி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கார் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






