செங்கல்பட்டு: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு


செங்கல்பட்டு: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு
x

இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூரை சேர்ந்தவர் டெய்சி ராணி. இவர் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி ஆவார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஊராட்சிமன்ற துணைத்தலைவரின் மனைவி டெய்சி ராணி பெசன்ட்நகரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து போலீசார் அவரது உடலானது அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story