கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது


கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவர் கைது
x

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(29 வயது). இவர் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-வது ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர் பல் மருத்துவ சிகிச்சை பெற வந்திருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

உடனடியாக பல் மருத்துவமனையை விட்டு வெளியேறிய மாணவி, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டன் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பல் மருத்துவர் மணிகண்டனை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

1 More update

Next Story